PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 4
1. ‘மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.’ இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்கான அதே பொருளுடைய வேறு சொற்கள்
(அ) மேகம், மயில்
(ஆ) மேகம், மான்
(இ) காற்று, மயில்
(ஈ) வானம், மகிழ்ச்சி
2. ‘உண்டார்’ இச்சொல்லுக்கான வினையாலணையும் பெயர்
(அ) உண்டவர்
(ஆ) உண்ட
(இ) உண்
(ஈ) உண்டு
3. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) கல் – மேடு
(ஆ) பழம் – குலை
(இ) புல் – கட்டு
(ஈ) ஆடு – மந்தை
4. கூற்று1: வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்.
கூற்று 2: வினையாலணையும் பெயர் காலத்தைக் காட்டாது.
(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
(ஆ) கூற்று 1, 2 சரி.
(இ) கூற்று 1, 2 தவறு.
(ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
5. தொழிற்பெயர் அடிப்படையில் வேறுபட்ட ஒன்றைத் தெரிவு செய்க.
(அ) பேறு
(ஆ) கேடு
(இ) சூடு
(ஈ) கெடு
6. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) தொடர்மொழி – அவன் வந்தான்.
(ஆ) தனிமொழி – கண்
(இ) தொடர்மொழி – மலர்
(ஈ) பொதுமொழி – வேங்கை
7. பின்வருவனவற்றில் ‘சொல்’ பற்றிய கூற்றுகளில் தவறானவற்றைத் தெரிவு செய்க.
1. இரு திணைகளை ஏற்கும்.
2. ஐந்து பால்களைக் குறிக்கும்.
3. மூவகை இடங்களில் வராது.
4. வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரும்.
(அ) 1
(ஆ) 2
(இ) 3
(ஈ) 4
8. உயிரளபெடை ………. வகைப்படும்.
(அ) ௩
(ஆ) ௨
(இ) ௫
(ஈ) ௮
9. எழில்முதல்வனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்
(அ) புதிய உரைநடை
(ஆ) இனிக்கும் நினைவுகள்
(இ) யாதுமாகி நின்றாய்
(ஈ) எங்கெங்கு காணினும்
10. உரைநடையின் அணிநலன்களில் ‘கலப்பில்லாத பொய்’ என்பதை ……….. என்கிறோம்.
(அ) சொல்முரண்
(ஆ) எதிரிணை இசைவு
(இ) முரண்படு மெய்ம்மை
(ஈ) உச்சநிலை
விடைக்குறிப்பு
1 - அ
2 - அ
3 - அ
4 - அ
5 - ஈ
6 - இ
7 - இ
8 - அ
9 - அ
10 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக