PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 12
01. ‘குணக்கு’ என்னும் சொல் குறிக்கும் பொருள்
(அ) கிழக்கு
(ஆ) குடக்கு
(இ) குளிர்ச்சி
(ஈ) தென்றல்
02. பொருத்துக.
1. ஐயூர் முடவனார் - (அ) செந்தமிழின் பின்னுதித்த தென்றலே
2. ஔவையார் - (ஆ) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
3. இளங்கோவடிகள் - (இ) வாயுவழக்கம் ஆயுள் அறிந்து செறித்தடங்கில்
4. பலபட்டடைச் சொக்கநாதர் - (ஈ) வளி மிகின் வலி இல்லை
(அ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(ஆ) 1-ஆ, 2-இ, 3-அ, 4-ஈ
(இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
03. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும் தமிழெண்களையும் குறிப்பிடுக.
(அ) ஆலமரம், வேப்பமரம், ௫, ௧
(ஆ) ஆலமரம், வேலமரம்,௪,௨
(இ) அரசமரம், வேங்கைமரம்,௧ ,௨
(ஈ) வேப்பமரம், ஆலமரம், ௪,௬
04. இலையுதிர்காலம் ................... சருகாயின!
மழைக்காலம் .................... தழைத்தன!
சருகுகளோ செழுமையான உரங்களாயின!
- புதுக்கவிதைக்குப் பொருத்தமான சொற்களை இட்டு நிரப்புக.
(அ) மரங்களெல்லாம், கிளைபரப்பின
(ஆ) காடெல்லாம், வளர்ந்தன
(இ) இலைகளெல்லாம், மரங்களெல்லாம்
(ஈ) மலையெல்லாம், முளைத்தன
05. பொருத்துக.
1. கொண்டல் - (அ) மேற்கு
2. கோடை - (ஆ) தெற்கு
3. வாடை - (இ) கிழக்கு
4. தென்றல் - (ஈ) வடக்கு
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-இ
06. "வளி மிகின் வலி இல்லை" என்று ஐயூர் முடவனார் எதைப் பற்றி பாடியுள்ளார்?
(அ) மழை
(ஆ) நிலம்
(இ) நீர்
(ஈ) காற்று
07. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்றவர் யார்?
(அ) ஔவையார்
(ஆ) திருமூலர்
(இ) தொல்காப்பியர்
(ஈ) பாரதியார்
08. முசிறித் துறைமுகம் யாருடையது?
(அ) சோழர்
(ஆ) பாண்டியர்
(இ) சேரர்
(ஈ) பல்லவர்
09. ‘கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது’ என்ற வரிகளில் மதுரை இளநாகனார் காற்றின் ................ குறிப்பிட்டுள்ளார்.
(அ) குளிர்ச்சி
(ஆ) வெப்பம்
(இ) தேவை
(ஈ) வேகம்
10. பொருத்துக.
1. ஆர்கலி - (அ) பறவை
2. கட்புள் - (ஆ) வானவில்
3. அகன்சுடர் - (இ) கடல்
4. திருவில் - (ஈ) சூரியன்
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-இ
விடைக்குறிப்பு
1 - அ
2 - இ
3 - ஆ
4 - இ
5 - அ
6 - ஈ
7 - ஆ
8 - இ
9 - ஈ
10 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக