TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 39
01. சூரியன் மறையும் நேரம் என்பது
(அ) யாமம்
(ஆ) வைகறை
(இ) மாலை
(ஈ) எற்பாடு
02. பொருத்துக.
1. குறிஞ்சி - அ) உப்புவிளைத்தல்
2. முல்லை - ஆ) நெல்லரிதல்
3. மருதம் - இ) நிரை மேய்த்தல்
4. நெய்தல் - ஈ) தேனெடுத்தல்
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
03. பொருத்துக.
1. வில்பிடித்த - அ) நான்காம் வேற்றுமைத் தொகை
2. நெடும்படை - ஆ) வினைத்தொகை
3. காலதூதன் - இ) பண்புத்தொகை
4. விரிசோதி - ஈ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
04. வரகு, சாமை இவற்றை உணவாகக் கொண்ட நிலங்கள்
(அ) மருதம்
(ஆ) பாலை
(இ) குறிஞ்சி
(ஈ) முல்லை
05. பொருத்துக.
1. வன்கண் - அ) உறவினர்
2. இன்மை - ஆ) பகைவர்
3. செறுநர் - இ) மனவலிமை
4. சுற்றம் - ஈ) வறுமை
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
06. பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது – இத்தொடருக்கான பொருள்
(அ) பொருளீட்டும் நெறியறிவே தொழில் புரிதல்.
(ஆ) தொழிலைச் செய்வதற்குரிய காலமறிந்து செய்தல்.
(இ) மதிக்கத் தகாதவரையும் மதிக்கச் செய்யும் பொருளை ஈட்டுதல்.
(ஈ) சிறந்த நூல்களைக் கற்றறிந்து புகழ் ஈட்டுதல்.
07. சிலம்பு, கிண்கிணி என்பது
(அ) காலில் அணிவது
(ஆ) இடையில் அணிவது
(இ) நெற்றியில் அணிவது
(ஈ) தலையில் அணிவது
08. வேளாண்மை செய்வோரின் கலை
(அ) கரகாட்டம்
(ஆ) தெருக்கூத்து
(இ) ஒயிலாட்டம்
(ஈ) புலியாட்டம்
09. “இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்”
இவ்வடிகளில் அமைந்துள்ள எதுகை
(அ) இந்த – சாந்தமான
(ஆ) சாந்தமான – சுமக்கின்றன
(இ) சுமக்கின்றன – தண்டுகள்
(ஈ) இந்த - பூவை
10. பைம்பொன் – பிரித்து எழுதுக.
(அ) பை+பொன்
(ஆ) பைம்+பொன்
(இ) பசுமை+பொன்
(ஈ) பச்சை+பொன்
11. குமரகுருபரர் இயற்றாத நூல் எது?
(அ) நீதிநெறி விளக்கம்
(ஆ) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(இ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
(ஈ) திருக்கருவை அந்தாதி
12. பொருள் தருக. நுதல்
(அ) வயிறு
(ஆ) நெற்றி
(இ) காது
(ஈ) உச்சிக்கொண்டை
விடைக் குறிப்பு
1 - ஈ
2 - அ
3 - ஈ
4 - ஈ
5 - இ
6 - இ
7 - அ
8 - ஆ
9 - அ
10 - இ
11 - ஈ
12 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக