PG TRB - TAMIL ELIGIBITY TEST
தேர்வு - 3
1. பின்வருவனவற்றுள் பொதுமொழியைத் தெரிவு செய்க.
(அ) கண்ணன்
(ஆ) எட்டு
(இ) அவர் வந்தார்
(ஈ) படி
2. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-
(அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
(ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
(இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
(ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
3. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
(அ) இலையும் சருகும்
(ஆ) தோகையும் சண்டும்
(இ) தாளும் ஓலையும்
(ஈ) சருகும் சண்டும்
4. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –
(அ) எந்+தமிழ்+நா
(ஆ) எந்த+தமிழ்+நா
(இ) எம்+தமிழ்+நா
(ஈ) எந்தம்+தமிழ்+நா
5. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலனையும் பெயரும் முறையே –
(அ) பாடிய; கேட்டவர்
(ஆ) பாடல்; பாடிய
(இ) கேட்டவர்; பாடிய
(ஈ) பாடல்; கேட்டவர்
6. வேர்க்கடலை, மிளகாய், மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –
(அ) குலை வகை
(ஆ) மணி வகை
(இ) கொழுந்து வகை
(ஈ) இலை வகை
7. கலைச்சொல் தருக. Consonant
(அ) மெய்யெழுத்து
(ஆ) உயிரெழுத்து
(இ) ஒப்பெழுத்து
(ஈ) சார்பெழுத்து
8. பொருந்தாக இணையைத் தெரிவு செய்க.
(அ) Discussion – உரையாடல்
(ஆ) Vowel – உயிரெழுத்து
(இ) Homograph – ஒப்பெழுத்து
(ஈ) Monolingual – ஒருமொழி
9. ‘நாற்றிசையும் செல்லாத நாடில்லை’ இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயருக்கான தமிழெண்
(அ) ௪
(ஆ) ௫
(இ) ௩
(ஈ) ௬
10. வினாவிலேயே விடை இருப்பது போன்ற வினாத்தொடரைத் தெரிவு செய்க.
(அ) குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?
(ஆ) குறளின்பம் என்றால் என்ன?
(இ) தமிழன் எதில் திளைத்தான்?
(ஈ) குறளின்பத்தில் திளைத்தது யார்?
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - அ
3 - ஈ
4 - இ
5 - ஈ
6 - ஆ
7 - இ
8 - அ
9 - அ
10 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக